Friday, June 9, 2017

Current Affairs May 8- May 9

சண்முகம் IAS அகாடமி 
நடப்பு நிகழ்வுகள் 
  1. NCTAD இன் உலக முதலீட்டு அறிக்கை 2017 படி, இந்தியா தொடர்ந்து அந்நிய நேரடி முதலீட்டிற்கான விருப்பமான நாடாகவே இருந்து வருகிறது .இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் நாடுகள் அமெரிக்கா, சீனா, இந்தியா.
  2. புதுடில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் தேசிய மனித பால் வங்கி மற்றும் பாலூட்டும் ஆலோசனை மையம், இரண்டையும் சுகாதார செயலாளர் சி.கே. மிஸ்ரா திறந்து வைத்தார்.
  3. உலகின் முதல் \'ஏரோபோட்\'‘aeroboat’ இந்திய-ரஷ்ய கூட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது நிலம், நீர், பனி , மலைச்சரிவு போன்ற இடங்களிலும் பயணிக்கும்.
  4. இந்தியா 4 ஜி இணைய வேகத்தில் 74 வது இடத்தில் உள்ளது
  5. உத்தர பிரதேசத்தில் முகள்சாராய் ரயில் நிலையத்துக்கு பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பெயர் சூட்டப்பட்டது.
  6. இந்திய ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய நாணயக் கொள்கையில் ரெபோ ரேட் விகிதம் 6.25 சதவீதமாகவும், எதிர் ரெபோ ரேட் விகிதம் 6 சதவீதமாகவும் அறிவித்தது.
  7. ஆக்சிஸ் பாங்க் லிமிட்டெட், உலக சுற்றுச்சூழல் தினத்தின் போது, மீளாய்வு செய்ய இயலும் பரிசு அட்டைகள் விநியோகம் செய்வதாக அறிவித்துள்ளது.
  8. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(Shanghai Cooperation Organisation) 17 வது உச்சிமாநாடு கசகஸ்தான் தலைநகரான அஸ்தானாவில் நடைபெறுகிறது.
  9. மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவுக்கு மகாராஷ்டிராவின் பத்திரிக்கையாளர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதான RedInk வழங்கப்படுகிறது.
  10. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்புச் சந்தை ஜப்பானை விஞ்சிவிடும் என்று பி.எம்.ஐ. ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளிலேயே உள்கட்டமைப்புச் சந்தையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  11. பண மதிப்பழிப்பு நடவடிக்கை நடைமுறையில் இருந்த காலத்தில், டில்லி நகர் 55 ஆயிரத்து, 665 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது.
  12. உலக சமுத்திர தினம், ஆண்டுதோறும் ஜூன் மாதம் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தீம், ‘Our Oceans, Our future’,
  13. அமெரிக்காவின் மசெசூட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்தும் இன்டர்நேஷனல் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங் ஃபேர் எனப்படும் போட்டி, பள்ளி மாணவர்களுக்கான உலகின் மிகப்பெரிய அறிவியல் போட்டியாகக் கருதப்படுகிறது. இந்த போட்டியில் மூன்று சிறப்பு விருதுகளைப் பெற்ற பெங்களூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சாஹிதி பிங்கலியின் பெயர் புதிய கிரகம் ஒன்றுக்கு சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  14. பிரென்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஹன் போபண்ணா மற்றும் கேப்ரியல் டேப்ரோஸ்கி ஆகியோர், ஜெர்மனியின் அண்ணா-லேனா க்ரோபேன்ட்ட் மற்றும் கொலம்பியாவின் ராபர்ட் பரா ஆகியோரை வீழ்த்தி கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றனர்.
  15. BRICS ஊடகங்களை வளர்ப்பதற்கு ஒரு மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
  16. உலகின் முதல் 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவிலிருந்து ஐஐடி-டெல்லி, ஐஐடி-பாம்பே இடம் பிடித்துள்ளது.
  17. \'டிஜி யத்ரா\'- விமான பயணிகளுக்கு வழங்கப்பட்ட இணைய வசதி
  18. இந்திய ரயில்வே முதல் மனித வள வட்ட மேசை மாநாடு டெல்லியில் நடைபெற்றது .
  19. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, வால் மார்ட் சில்லறை நிறுவனம், பார்ச்சூன் இதழின் முதல் 500 நிறுவனங்களின் தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது.
  20. தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போன்று கர்நாடகாவின் கம்பலா போட்டிக்கும் சட்ட அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது
  21. விஞ்ஞானிகள் மிகவும் வெப்பமான வெளிகிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் - KELT-9b
  22. மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர் பி கோவர்த்தன ரெட்டி காலமானார்
  23. புது தில்லியில் தேசிய உடல்நலம் தொகுப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் யோகா நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக நாடெங்கிலும் நூறு யோகா மையங்கள் அமைக்க அரசு முடிவு.
  24. வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் தலைவரான பாசுதேவ் சாட்டர்ஜி கௌகாத்தியில் காலமானார்
  25. இந்தியாவும், தெற்கு - தெற்கு ஒத்துழைப்புக்கான ஐ.நா. அலுவலகமும் வளர்ந்து வரும் நாடு முழுவதும் நிலையான அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு கூட்டு நிதி ஒன்றை தொடங்கின.

Thursday, June 8, 2017

Current Affairs May 6- May 7

சண்முகம் IAS அகாடமி 
நடப்பு  நிகழ்வுகள் 


  1. இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் சிங்கப்பூரில் நடந்த ஐடிஎப் ஆண்கள் பியூச்சர் டென்னிஸ் பட்டத்தை வென்றார்.
  2. விஜயா வங்கி 100 டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளது
  3. நாட்டின் நீண்ட தூர ஏவுகணை சோதனை செய்ய தெற்கு அந்தமானில் உள்ள ரூட்லண்ட் தீவுக்கு தேசிய வனவிலங்கு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
  4. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வடகிழக்கு மாநிலங்களுக்கான "மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம்" அறிவித்தார் .
  5. 'பாகுபலி' திரைப்படத்தின் மூலம் சர்வதேச புகழ்பெற்ற பிரபாஸ் தற்போது ஜியோனி மொபைல்போன் நிறுவனத்தின் தூதராக ஒப்பந்தமாகியுள்ளார்.
  6. பிரபஞ்சத்தில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்களை விட வெப்பமான மற்றும் பூமியில் இருந்து 650 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள மிக வெப்பமான கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது.
  7. நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் டீயுபா நான்காவது முறையாக நேபாளின் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் .
  8. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் 500 கிராமங்களை இந்தியாவில் தத்தெடுக்கின்றனர்.
  9. கடந்த 10 ஆண்டுகளில் கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதப்படுத்த மத்திய அரசு நியாய மித்ரா எனும் நீதிமன்றம் நாடு முழுவதும் நிறுவ தீர்மானித்துள்ளது.
  10. ஹரியானா ஸ்வராஜ் ஜெயந்தி யோஜனாவின் கீழ் நுரையீரல் காஞ்சுகேட் தடுப்பூசி (Pneumococcal Conjugate Vaccine) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது
  11. சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா \"வாழ்க்கையை பாதுகாக்க வாழ்வுக்கான திறன்\"( Skill for Life, Save a Life ) எனும் திட்டத்தை தில்லியில் துவக்கினார்.
  12. ஸ்ரீலங்காவின் இரயில் துறையை அபிவிருத்தி செய்வதற்காக 318 மில்லியன் டாலர் கடனாக இந்தியா வழங்குகிறது.
  13. உத்திர பிரதேச மாநிலம் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து NCERT புத்தகங்கள் வழங்க உள்ளது 
  14. கேரள மாநில அரசு, கல்யாண வீடுகளில் எளிதில் மட்க கூடிய இயற்க்கையான பொருட்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
  15. குழந்தைகளின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு என்ற ஐ.நா. விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு உறுப்பினராக சச்சின் இணைந்தார் .
  16. ஹோஷிர் சிங் பதிப்புரிமை அலுவலகத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  17. மாண்டினீக்ரோ நேட்டோவின் 29 வது உறுப்பினராக இணைந்தது .
  18. ஒற்றை மகளிர் ஓய்வூதியத் திட்டம் தெலங்கானா அறிமுகப்படுத்தியது.
  19. ஐசிஐசிஐ வங்கி கடந்த ஒரு வருடத்தில் 200 சூரிய ஆற்றல் ஏடிஎம் தளங்களை அமைத்துள்ளது
  20. பிரபல எழுத்தாளர் ஆனந்த நீலகந்தன், ஓடியா கவிஞர் ஹரபிரசாத் தாஸ் மற்றும் எழுத்தாளர் பரமிதா சத்பதி ஆகியோர் கலிங்க இலக்கிய விருதுக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.
  21. \'Ministry of Utmost Happiness\' என்ற நூலை அருந்ததி ராய் எழுதினார்.
  22. ஐக்கிய நாடுகளின் முதல் உலக சமுத்திர மாநாடு அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறுகிறது.
  23. பிரதம மந்திரி நரேந்திர மோடி டெல்லி ஐ.ஐ.டி யில் ஸ்பிக்கு மேகாயின்(SPIC MACAY) 5 வது சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
  24. 2017 ஆம் ஆண்டு IMD உலக டிஜிட்டல் போட்டித்திறன் தரவரிசையில் 63 நாடுகளில் இந்தியா 51 வது இடத்தில் உள்ளது.
  25. UNCTAD இன் உலக முதலீட்டு அறிக்கை 2017 படி, இந்தியா தொடர்ந்து அந்நிய நேரடி முதலீட்டிற்கான விருப்பமான நாடாகவே இருந்து வருகிறது .இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் நாடுகள் அமெரிக்கா, சீனா, இந்தியா.

மேலும் படிக்கச் http://tamilcurrentaffairs.shanmugamiasacademy.in/

Wednesday, June 7, 2017

Current Affairs June 3-5

சண்முகம் IAS அகாடமி 

நடப்பு நிகழ்வுகள் 

  1. இந்திய வம்சாவளியான லியோ வரட்கர் அயர்லாந்தின் அடுத்த பிரதம மந்திரி.
  2. சந்தை ஒழுங்குமுறை நிறுவனமான செபி, உதய் கோட்டக் தலைமையின் கீழ் கார்ப்பரேட் கவர்னன்ஸ் மீது ஒரு குழுவை அமைத்துள்ளது
  3. பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக சஷி ஷேகர் வேம்படி நியமிக்கப்பட்டார்.
  4. சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் (International Table Tennis Federation) நடுவர் குழுவின் (URC) உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் - கணேஷன் நீலகண்ட ஐயர்
  5. இந்திய ரிசர்வ் வங்கி கணேஷ் குமாரை நிர்வாக இயக்குனராக நியமித்துள்ளது
  6. பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட், ரக்ஷா மந்திரி விருதை பெற்றது .
  7. இந்தியாவின் நிதின் குமார் சின்ஹா HCL ஆசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றார்.
  8. ஆந்திராவின் விழிணகரம் கிராமம் MGNREGA தேசிய விருதை பெற்றது
  9. நியூட்ரான் நட்சத்திரங்களைப் ஆராய்வதற்காக உலகில் முதன்முறையாக விண்கலம் அமைத்தது நாசா.
  10. ஒன்றுமறியாத குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கு எதிரான சர்வதேச தினம் - ஜூன் 4
  11. இந்தியா முதன்முறையாக அனைத்து வானிலையையும் தாங்கும் தரையிலிருந்து விண்ணை நோக்கி தாக்கும் ஏவுகணையை (QR-SAM) ஒடிசா சந்திபூரில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
  12. தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மின்டன் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத் வெற்றி பெற்றார் .
  13. மேரி மீக்கர் நிறுவனம், இந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இணையதளச் செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்மூலம் ஃபேஸ்புக் செயலியை விட ட்ரூ காலர் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் வாட்ஸ்அப் முதலிடத்தில் உள்ளது.
  14. உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 , 2017 உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் மையக்கருத்து - இயற்கை மக்களை இணைக்கிறது.
  15. கழிவுகளை பிரித்தெடுத்து சேகரிக்கும் வாகனங்கள் டெல்லியில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தொடக்கி வைத்தார் .
  16. 21 வது ஃபெடரர் கோப்பை தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் சுதா சிங் தங்கப் பதக்கம் வென்றார்
  17. ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தரமில்லா உறுப்பினர்களாக கோட் டி ஐவோயர், ஈக்வடோரியல் கினியா, குவைத், போலந்து மற்றும் பெரு ஆகிய நாடுகளை பொதுச்சபை தேர்ந்தெடுத்துள்ளது
  18. உலக போட்டித்திறன் பட்டியலில் இந்தியா 45 வது இடத்தில் உள்ளது
  19. உலகளாவிய சில்லறை வர்த்தக முன்னேற்ற பட்டியலில் இந்தியா முதலிடம்
  20. செயற்கை மேகங்கள் உருவாக்கும் தொழில்நுட்பத்தை நாசா அறிமுகப்படுத்துகிறது.
  21. உலக வங்கி 2017 ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி வீதம் 7 .2 சதவீதமென கணித்துள்ளது.
  22. Solar Comet என்று அழைக்கப்படும் சூரிய ஒளி பஸ் புது தில்லியில் 20 நாள் பயணம் தொடங்கியது.
  23. மகாராஷ்டிராவில் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் சாஹித் ஆற்றின் மீது புதிய பாலத்தை அமைச்சர் நிதின் கட்காரி திறந்து வைத்தார் .
  24. இந்தியாவின் முதல் கிராம தெரு விளக்குகளில் LED பல்புகளை பயன்படுத்தும் திட்டத்தை ஆந்திர மாநிலத்தில் செயல்படுத்த உள்ளது மத்திய அரசு .
  25. 4ஜி பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் 19.12 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.
  26. எஸ்.பி.ஐ மற்றும் உலக வங்கி இணைந்து சோலார் திட்டங்களுக்கு ரூ.400 கோடி கடன் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
  27. இந்திய ராக்கெட் வரலாற்றில் மிக அதிகளவு எடையை சுமந்து விண்ணில் பாயும் ஏவுகணை என்ற பெருமையை ஜிஎஸ்எல்வி எம்கே 3 டி1 ராக்கெட் பெறற்றுள்ளது. இந்த ராக்கெட் ஜிசாட் 19 என்ற 3136 கிலோ எடை கொண்ட இணைய தொலைத்தொடர்பு செயற்கைகோளை தாங்கிச் சென்றது. இதன் மூலம் இந்தியாவின் இணையதள வேகத்தையும் மிக அதிக அளவில் உயர்த்துவதுடன், விண்ணிற்கு மனிதர்களையும் அனுப்ப முடியும்.
  28. கர்நாடக மாநிலம் மைசூருவில் முதலமைச்சர் சித்தராமையா டிரின் டிரின் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  29. ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் குழு என்ற பெருமையை பெறுகிறது. ஸ்னோ லைன் (இந்தியா )
  30. அமெரிக்காவில் நடந்த ஆங்கில சொற்களில் உள்ள பிழையை நீக்கும் போட்டி நடந்தது. இதில் இந்திய வம்சாவளியை சார்ந்த அனன்யா வினய் என்ற 12 வயது சிறுமி முதலிடத்தை பிடித்துள்ளார்.
  31. உலகின் 31% ஏழைக் குழந்தைகள் வசிக்கும் நாடு இந்தியா என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
  32. முதல் முறையாக தனியார் நிறுவனம் ஒன்று தனது மூன் எக்ஸ்பிரஸ் (MoonEx) என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்ப உள்ளது.
  33. தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கூறி, கத்தார் நாட்டுடன் தங்கள் உறவை முடித்துக் கொள்வதாக சவுதி, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து அறிவித்துள்ளன.


              மேலும் படிக்க http://tamilcurrentaffairs.shanmugamiasacademy.in/



Sunday, June 4, 2017

Current Affairs June 1 -2

சண்முகம் IAS அகாடமி
 நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2017


  1. இந்தியாவில் முதன்முறையாக தெலுங்கானா மாநிலம் டி-வாலட் (T-Wallet ) என்ற ஒரு டிஜிட்டல் பணப்பையை பொது மற்றும் தனியார் நிதி பரிவர்த்தனை செய்ய தொடங்கியது.
  2. வரலாற்று எழுத்தாளர் ராமச்சந்திர குஹா பி.சி.சி.ஐ. நிர்வாகி பதவியை ராஜினாமா செய்தார்.
  3. 2018 ஆம் ஆண்டில் சூரியனின் வளிமண்டலத்தை ஆய்வு செய்ய நாசா பார்கர் சோலார் என்ற விண்கலத்தை அனுப்புகிறது .
  4. மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவுக்கு இரண்டாமிடம் . முதலிடம் சீனா
  5. தென் கொரியாவில் நடைபெறும் சீனாவின் தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் நிதி மந்திரி அருண் ஜேட்லி கலந்து கொள்கிறார் .
  6. பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும், பசு படுகொலைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
  7. இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் அமைப்பு \'நவிக்\'( \'NavIC\') 2018 ன் ஆரம்பத்தில் செயல்பட உள்ளது .
  8. ஐ.நா பொதுச்சபை அமைப்பின் அடுத்த ஜனாதிபதியாக ஸ்லோவாக்கிய வெளியுறவு மந்திரி Miroslav Lajcak தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  9. இந்திய அமெரிக்க எழுத்தாளர் ஜும்பா லஹரி 2017 ஆம் ஆண்டு PEN / Malamud விருதினைப் பெறுகிறார் .
  10. இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்த ஆண்டு ESPN World Fame 100 பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
  11. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெறும் 18 ம் இந்திய-ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
  12. அமெரிக்காவின் முன்னாள் இந்திய தூதுவர் நிருபமா ராவ் வாஷிங்டனை மையமாகக் கொண்ட சிந்தனைக் குழுவிற்கு பொது கொள்கைக் கூட்டாளியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  13. இந்தியா உலக வங்கியுடன் 36 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  14. உலக பெற்றோர் தினம் - ஜூன் 1
  15. மும்பை, மஸாகோன் டாக் லிமிடெட் தயாரித்த இரண்டாவது ஸ்கார்பியின் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் INS காந்தாரி பாதுகாப்பு படையில் சேர்க்க உள்ளது
  16. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் மானிகா பாத்ரா மற்றும் மவுமா தாஸ் ஆகியோர் முதன் முறையாக தேர்ச்சி பெற்று வரலாற்றை உருவாக்கியுள்ளனர்.
  17. ஒடிசா மாநிலம், சந்திப்பூர் அருகில் 350 கி.மீக்கு அப்பால் இருக்கும் இலக்கைத் துல்லியமாக கண்டறிந்து அழிக்கும் பிரித்வி-II ஏவுகணை விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.
  18. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 2015 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இது அமெரிக்க தனது நாடு மற்றும் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும் என்றார் .
  19. நாட்டின் முதல் கடலோர எச்சரிக்கை மையங்கள் ஒடிசாவில் நிறுவப்படவுள்ளது .
  20. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் சீன ஆதரவுடைய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) இன் உறுப்பினராக அஸ்தானா உச்சி மாநாட்டில் இணைகிறது .
  21. உலக பால் தினம் : ஜூன் 1
  22. 70 வது உலக சுகாதார அமைப்பின் பொதுக்கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது.
  23. ஐஸ்லாந்து உலகின் மிகவும் அமைதியான நாடு, இந்தியா 137 வது இடத்தில் உள்ளது
  24. நாடக ஆசிரியரான பால்வந்த் கர்கியின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது .
  25. செர்பியாவின் புதிய ஜனாதிபதியாக அலெக்ஸாண்டார் வூசிச் பதவியேற்றார்
  26. 223 வருட பழைமையான , கிண்டி பொறியியல் கல்லூரிக்கு முதல் முறையாக டி.வி. கீதா என்ற பெண்மணி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  27. கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். 
மேலும் படிக்கச் http://tamilcurrentaffairsquiz.shanmugamiasacademy.in/

Friday, June 2, 2017

current Affairs May 31

சண்முகம்  IAS  அகாடமி 
நடப்பு நிகழ்வுகள் 


  1. ஐ.ஐ.டி காரக்பூரில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மலிவான, விரைவான மற்றும் மாசுபடுத்தாத உயிரி எரிபொருளை உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். 
  2. முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் பிரபல இயக்குநர் தாசரி நாராயண ராவ் ஹைதராபாத்தில் காலமானார்.
  3. மே 31 - உலக புகையிலை பயன்படுத்தா தினம்.
  4. முதன் முறையாக கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைக்கு எதிரான பாதுகாப்பு முறைமையை வெற்றிகரமாக சோதித்தது அமெரிக்கா
  5.  உத்தரப்பிரதேசத்தில் அரசு மருத்துவர்களின் ஓய்வூதிய வயதை 60 லிருந்து 62 ஆண்டுகள் வரை உயர்த்தியது.  
  6. 21 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமி போன்ற கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், அதன் மேற்பரப்பில் திரவ நீரைக் கொண்டிருக்கிறது
  7. 2017 இந்திய மொபைல் காங்கிரஸ் (India Mobile Congress ) செப்டம்பர் மாதம் புது தில்லியில் நடைபெறுகிறது . சீனாவுக்குப் அடுத்தபடியாக இந்திய தொலைதொடர்பு சந்தை உலகிலேயே இரண்டாவது மிகப்பெரியதாகும்.
  8. இந்திய ரிசர்வ் வங்கி புதிய ஒரு ரூபாய் நோட்டு இந்திய அரசாங்கத்தால் அச்சிடப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
  9. ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியர் - விராத் கோஹ்லி
  10. பெண்கள் பணிபுரியும் நாடுகள் தரவரிசையில் 131 நாடுகளில் இந்தியா 120 வது இடத்தில் உள்ளது.  உலகின் மூன்றாவது பெரிய விமானச் சந்தையாக இந்தியா விளங்குகிறது.
  11. தில்லி போலீசார் மிதிவண்டி மூலம் ரோந்து செல்வதை தொடங்கிவைத்தனர் .புவி அறிவியல் அமைச்சகம் 2018 ஜனவரியில் \'ஆழ்கடல் மிஷன்\' எனும் ஆராய்ச்சியை துவக்குகிறது
  12. குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (ஜி.சி.எம்.எம்.எஃப்), செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீவனம் அளவிடல் மதிப்பீடுக்காக இஸ்ரோவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  13. புகையிலை கட்டுப்பாட்டை பொறுப்புணர்வுடன் மேற்கொண்டதற்க்காக மத்திய சுகாதார அமைச்சர் ஜே பி நட்டாவுக்கு உலக சுகாதார அமைப்பின் சிறப்பு விருது வழங்கப்பட்டது .
  14. கிரீஸின் முன்னாள் பிரதம மந்திரி கான்ஸ்டன்டைன் மிட்சோதகிஸ் 98 வது வயதில் காலமானார் .
  15. தங்கத்தை அதிகமாக வாங்கிக் குவிக்கும் இந்திய மாநிலம் - கேரளா
  16. மணிப்பூர் மாநில சட்டமன்றம் பந்த் போன்ற அனைத்து தடைகளையும் சட்டவிரோதமாக அறிவித்து புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது.
  17. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி, மும்பையில் எட்டு சாலை இணைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை எளிதாக சென்றடைய உதவும் .
  18. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். தலைவர் - பேராசிரியர் ராம் ஷங்கர் கத்தெரியா துணைத்தலைவர் - l . முருகன்
  19. இந்தியா மற்றும் ஸ்பியினுக்கு இடையில் புதிதாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சைபர் பாதுகாப்பில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலில் கையழுத்தாகியது. புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தியில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டாவதாக கையெழுத்தாகியது. உடலுறுப்புகள் மாற்றுசிகிச்சைகள், இந்திய வெளிநாட்டு சேவை நிறுவனம் மற்றும் ஸ்பெயின் டிப்ளொமாட்டிக் அகாதமி, சிவில் வான்வழி போக்குவரத்து ஆகியவற்றில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை மாற்றம் செய்தல் மற்றும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா வழங்குதல் ஆகியவற்றுக்கு இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
மேலும் படிக்கச் கிளிக் செய்யவும் http://tamilcurrentaffairs.shanmugamiasacademy.in/

Thursday, June 1, 2017

current affairs 28-30

சண்முகம் ஐ  ஏ  எஸ்  அகாடமி 
நடப்பு நிகழ்வுகள் 
  1. அஹமதாபாத்தில் ஜிகா வைரஸ் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) உறுதிப்படுத்தியுள்ளது.
  2. உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை சிலியில் கட்ட கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
  3. ஆப்பிள் நிறுவனம் தென்கிழக்கு ஆசியாவின் முதல் கிளையை சிங்கப்பூரில் திறந்துள்ளது லூயிஸ் ஹாமில்டன் மிகவும் பிரபலமான கார் டிரைவர்களில் முதலிடம்
  4. உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஜெர்மனியில் டூசெல்டார்ஃப் நகரில் தொடங்குகிறது
  5. ஆசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் புனேயில் தொடங்கியது
  6. பேஸ்புக்கில் அதிகம் பேர் பின்பற்றப்பட்ட உலக தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளதாக பேஸ்புக் தகவல் வெளியிட்டுள்ளது.
  7. மொரிஷியஸுக்கு இந்தியா 500 மில்லியன் டாலர் உதவி அளிக்கிறது
  8. இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் 5 முதல் 9 வரை நிதிசார் கல்வியறிவு வாரமாக அனுசரிக்க உள்ளது
  9. ஐஓசி இந்தியாவின் மிகவும் இலாபகரமான பொதுத்துறை நிறுவனமாகும்
  10. சிறந்த துறைமுகத்துக்கான கப்பல் அமைச்சக விருதை பெறுகிறது - பாரதீப் துறைமுகம்
  11. 2017 சுதீர்மான் கோப்பையை தென் கொரியா வென்றது
  12. சர்வதேச ஐ.நா. அமைதி காப்பாளர் தினம் - மே 29
  13. மெக்ஸிக்கோவில் நடந்த உலக பேரழிவு ஆபத்து குறைப்பு(Global Platform for Disaster Risk Reduction (GPDRR) பொதுக்கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது
  14. பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை ஹரியானா மாநிலம் அறிவித்தது
  15. மணிப்பூர் அரசு தமங்லாங் மாவட்டத்தின் டிலாங் கிராமம் மாநிலத்தின் பல்லுயிர் மரபுரிமை தளமாக அறிவித்துள்ளது.
  16. கர்நாடகாவில் சித்ரதுர்காவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) புதிதாக கட்டப்பட்ட ஏரோனாட்டிகல் டெஸ்ட் ரேஞ்ச் (Aeronautical Test Range) திறந்து வைக்கப்பட்டது.
  17. செபாஸ்டியன் வெட்டல், மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸை வென்றார்
  18. 2016 ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி புரஸ்கார் விருது சத்யபிரதா ரவுட் என்பவருக்கு வழங்கப்பட்டது.
  19. வங்காள விரிகுடாவில் மோரா என்ற வெப்ப மண்டல சூறாவளி தீவிரமடைந்துள்ளது. இது 2017 ஆம் ஆண்டில் வங்காள விரிகுடாவில் தோன்றிய இரண்டாவது சூறாவளி. முதல் சூறாவளி மாருதா.
  20. சர்வதேச போட்டியான சேட்லைட் உலகக் கோப்பை வாள்வீச்சு போட்டி ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்றது. இதன் ‘சேபர்’ பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை சி.ஏ. பவானி தேவி தங்கம் வென்றுள்ளார்.
  21. இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் மனிதர்களை அழைத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ராக்கெட்டிற்கு ஜி.எஸ்.எல்.வி மார்க் - III, எனப்பெயரிட்டுள்ளனர். இது வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் சோதனை நிகழ்த்தப்படயிருக்கிறது.
  22. ஆப்கானிஸ்தானில் முழுவதும் பெண்களால் இயக்கப்படும் தொலைக்காட்சி சேனல் \" ஜான் அல்லது மகளிர் தொலைக்காட்சி \" இந்த மாதம் ஒளிபரப்பத் தொடங்குகிறது
  23. நாட்டிலுள்ள கிராமப்புறங்களில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்துவதற்காக தர்வாஸா பேண்ட் என்ற புதிய பிரச்சாரத்தை அரசு தொடங்குகிறது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பிரச்சாரத்தை நடத்துகிறார்.
  24. மணிப்பூர் ஆளுநர் மற்றும் முன்னாள் சிறுபான்மை மந்திரி நஜ்மா ஹெப்டுல்லா ஜமியா மில்லியா இஸ்லாமி பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.1920 இல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் வேந்தர்.
  25. மகாராஷ்டிரா திறன் மேம்பாட்டு துறை, பெரிய நிறுவனங்களுடன் தொடர்புகொள்வதற்கு மின்னஞ்சல் முகவரியைத் தொடங்கியது. email id : mahamaitri.sded@maha.gov.in
  26. உலகளாவிய சுற்றுலா வளர்ச்சியானது 4.6 சதவீதமாக இருந்தபோது இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சி 15.4 சதவீதத்தை அடைந்தது.
  27. ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா திருச்சியை அடுத்த திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி தலைமை தாங்கினார்.
  28. கடந்த 2016-17 நிதியாண்டில் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்த நாடாக, சிங்கப்பூரைப் பின்னுக்குத் தள்ளி மொரீஷியஸ் முதலிடம் பிடித்துள்ளது.
  29. 2017-18 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.2% வளர்ச்சியடையும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
  30. பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி நான்காவது முறையாக கோல்டன் ஷூ விருது வென்றார்
  31. பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி நான்காவது முறையாக கோல்டன் ஷூ விருது வென்றார்
  32. கோவா மாநில அரசாங்கம் 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளது
  33. இந்தியா மற்றும் பிஜி நாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கை செய்துள்ளது
  34. விஞ்ஞானிகள் புதிய கண்ணாடி தவளை இனங்களை ஈகுவடாரில் அமேசானிய தாழ்நிலங்களில் கண்டுபிடுத்துள்ளனர் .
  35. மத்திய மனித வள துறை அமைச்சகம் ராகிங்குக்கு எதிராக மொபைல் அப்பிளிகேஷனை பல்கலைக்கழக மானிய குழு உதவியுடன் அறிமுகப்படுத்தியுள்ளனர்
  36. 2015 ஆம் ஆண்டிற்கான 26 பிரபல ஹிந்து கல்வியாளர்களுக்கு இந்தித் செல்வி சம்மன் விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்
  37. கேரளாவின் ஜார்ஜ் குரியன் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
         மேலும் படிக்கச் கிளிக்செய்யவும் http://tamilcurrentaffairs.shanmugamiasacademy.in/