Monday, March 10, 2014

ஒருநாள் தரவரிசை: கோலி மீண்டும் முதலிடம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையை வெளியிட்டுள்ளது ஐசிசி. அதில் இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஆசிய கோப்பை போட்டிக்கு முன்பு தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸைவிட 2 ரேட்டிங் புள்ளிகள் பின்தங்கியிருந்தார் கோலி. ஆசிய கோப்பை போட்டியில் ஒரு சதம் உள்பட 189 ரன்கள் குவித்ததன் மூலம் 12 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற கோலி, மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
இந்தியாவின் ஷிகர் தவண் 3 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தையும், ரோஹித் சர்மா ஓர் இடம் முன்னேறி 22-வது இடத்தையும், ரவீந்திர ஜடேஜா 12 இடங்கள் முன்னேறி 50-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இலங்கை வீரர் திரிமானி 29 இடங்கள் முன்னேறி 39-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய அதிகபட்ச தரவரிசை. டிவ்லியர்ஸ் 2-வது இடத்திலும், ஆஸி வீரர் பெய்லி 3-வது இடத்திலும் உள்ளனர்.