Monday, March 31, 2014

சி.ஐ.ஐ.க்கு புதிய தலைவர் நியமனம்

இந்திய தொழிலக கூட்டமைப் பின் (சி.ஐ.ஐ.) புதிய தலை வராக அஜய் ஸ்ரீராம் நியமிக்கப் பட்டிருக்கிறார். இவர் டி.சி.எம்.ஸ்ரீராம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார். 2014-15-ம் ஆண்டுக்கான தலைவராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மும்பையில் இருக்கும் சைடன்ஹாம் கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றவர். இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளில் இருக்கும் முக்கியமான கல்லூரிகளில் நிர்வாக பயிற்சி பெற்றவர். ஸ்ரீராம் காமர்ஸ் கல்லூரியில் நிர்வாக தலைவராகவும் இவர் இருக்கிறார். விவசாயம், வினைல் உள்ளிட்ட பல பிஸினஸ்களை செய்யும் டி.சி.எம். நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 5,700 கோடி ரூபாய். நௌசத் போர்ப்ஸ் 2014ம் ஆண்டுக்கான இந்திய தொழிலக கூட்டமைப்பின் துணைத்தலைவராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.
சி.ஐ.ஐ.-யின் தற்போதைய தலைவராக இன்போஸிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் கிருஷ் கோபாலகிருஷ்ணன் இருக்கிறார்.